பாலியல் வழக்கில் அதிமுகவினர் கைது தமிழக அரசின் சான்றாக அமைந்துள்ளது: கமல்ஹாசன் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாலியல் வழக்கில் அதிமுகவினர் கைது தமிழக அரசின் சான்றாக அமைந்துள்ளது: கமல்ஹாசன் பேச்சு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பொள்ளாச்சி மாவட்டமாக தகுதியான பகுதியாகும்.

சிறப்புமிக்க பொள்ளாச்சியில் பாலியல் சம்பவ வழக்கு விசாரணை, 600 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேற்கொள்ளப்பட்டு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிந்தேன். இதுவே இந்த அரசின் சான்றாக உள்ளது.

இத்தகைய குற்ற சம்பவத்துக்கு ஆளான அரசை நீக்க தயாராக வேண்டும்.

தொழில்முனைவோர், வேலை வாய்ப்பை கொடுக்கும் பொள்ளாச்சியானது, பாலியல் குற்றத்துக்கு புகழ் பெறக்கூடாது. கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வரும் களமாக இருக்கக்கூடாது.

இனியும் தாமதிக்காமல், நல்லரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலைவிட்டு சென்று விடக்கூடாது.

இளைஞர்கள்தான் அரசியல் மாற்றத்தை தர முடியும். நம்மால் முடியும் என்றால், விரைவில் நேர்மையான அரசு திகழும்.

இந்த முறை, அரசியல் மாற்றத்திற்கான விதையை நீங்கள் தூவ வேண்டும்’ என்றார்.

.

மூலக்கதை