விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை

    இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக விக்கிப்பீடியாவினை பயன்படுத்தியிருப்போம். ஆனால் அவ்விக்கிப்பீடியா மேம்படுவதற்குப் பங்களிப்பினை அளித்திருப்போமா என்றால் கேள்விக்குறியே. அவ்வகையில் வேலூரைச் சேர்ந்த அரசு ஊழியர் கி. மூர்த்தி அவர்கள் தனியொருவராக 5000 கட்டுரைகளை எழுதி சாதனை படைத்துள்ளார். அது மட்டுமில்லாது முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திருத்தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார். விக்கிப்பீடியாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பயனர்கள் எழுதி இருந்தாலும், இந்தியாவிலிருந்து 5000 தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கிய பெருமை இவரையேச் சாரும். 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் எழுதி வரும் இவரின் கட்டுரை எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் நாள் ஒன்றிற்கு இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது. அரசு ஊழியராக இருந்த போதும், கட்டுரைகளை எழுத நேரம் ஒதுக்கிச் சிறப்பான பணியை கி. மூர்த்தி அவர்கள் ஆற்றியுள்ளார்.

மூலக்கதை