டாக்டர் கணவனிடமிருந்து பிரிந்ததால் பெண் மருத்துவர் மகனுடன் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டாக்டர் கணவனிடமிருந்து பிரிந்ததால் பெண் மருத்துவர் மகனுடன் தற்கொலை

அமராவதி: ஆந்திர மாநிலம் ராஜமஹேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த தோல் மருத்துவர் லாவண்யா (33). இவர் தெலங்கானாவை சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணந்தார்.

இவர்களுக்கு 7 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளார். இருப்பினும் தம்பதிகள் இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டதால், தற்போது இருவரும் பிரிந்துள்ளனர்.

ராஜமுந்திரியில் உள்ள தந்தையுடன் கடந்த 2 மாதமாக லாவண்யா மற்றும் அவரது மகன் வசித்து வருகின்றனர். இவரது கணவர் சமீபத்தில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
 
இதனால் மனமுடைந்த லாவண்யா, தனது மகனுடன் சேர்ந்து தானும் தற்ெகாலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

நேற்று முன்தினம் இரவு படுக்க செல்லும் முன் தனது மகன் நிஷாந்துக்கு தூக்க மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவரும் தூக்க மாத்திரைகளை போட்டுக் கொண்டார்.

அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால் இருவரும் மயக்கமடைந்து நீண்ட நேரமாக உறங்கிய நிலையில் கிடந்தனர். அதிர்ச்சியடைந்த அவரது தந்தை டாக்டர் புத்தர், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.



ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில் மகனுடன் பெண் மருத்துவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறந்தவரின் தந்தை புத்தர் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவரான கணவர் கிருஷ்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை