மலர்ந்தது 38- வது மாவட்டம் மயிலாடுதுறை
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல் இருந்த மாவட்டம் முழுமையாக மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்கிக் கொடுத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனைத்து அரசியல் இயக்கங்களும், மயிலாடுதுறை மாவட்ட மக்களும் , மமிலாடுதுறைத் தமிழ்ச்சங்கமும், ஏனைய தமிழ் அமைப்புகளும், விவசாய பெருங்குடிமக்களும், அனைத்து அறம் சார்ந்த சேவை அறக்கட்டளைகளும், மீனவ மக்களும், வர்த்தக சங்கங்களும், மூத்தோர் குடிமக்களும், காவிரிக்கதிரின் நிறுவனரும் ஆசிரியர் குழுமமும், அனைத்து ஆசிரிய பேராசிரிய குழுக்களும், பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினரும் தாங்கள் கண்ட கனவை மெய்பித்த முதலமைச்சருக்கு நன்றியை கணிக்கையாக்குகிறார்கள்...
முதலாவது மாவட்ட ஆட்சி தலைவராக திருமதி.லலிதா IAS அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
பின்பு மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள், முதல் மாவட்ட ஆட்சியாளருடன் சேர்ந்து வெதுப்பக இனிப்பை வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பொன்னான நேரம்… பொன்னான நாள்…
ஒரு தாய்மை ஆளுமை ஏற்ற நாளும் பொன்னாதே… இனி மயிலாடுதுறை மாவட்டம் மறுமலர்ச்சி பெறும்… இது காலத்தின் கட்டாயம்...
ஜெனிபர் பவுல்ராஜ்
நிறுவனர், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம்