எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் இந்தியாவில் சோதனை

தினமலர்  தினமலர்
எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் இந்தியாவில் சோதனை

அமராவதிநகர்: எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது.

ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன. சீன விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் பதிலடி கொடுக்க கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஏற்கனவே இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன.

ஆகாஷ் ஏவுகணையை அதிக செங்குத்து உயரத்திலுள்ள இலக்கை தாக்கும் விதத்தில் டிஆர்டிஓ மேம்படுத்தி வருகிறது. மேலும் வீரர்கள் தோளில் வைத்து ஏவக்கூடிய இக்லா ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை