விராட பருவம் படப்பிடிப்பில் ராணா

தினமலர்  தினமலர்
விராட பருவம் படப்பிடிப்பில் ராணா

கொரோனா தாக்கம் உருவாவதற்கு முன்பாக வேணு உடுகுலா என்பவர் இயக்கத்தில் பீரியட் படமாக உருவாகி வரும் 'விராட பருவம் 1992' என்கிற படத்தில் நாயகனாக ராணா நடித்து வந்தார் கடந்த ஏழு மாதங்களாக படப்பிடிப்பு எதிலும் பங்கேற்காத நடிகர் ராணா, தற்போது மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராணா.. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியாமணி மற்றும் சாய்பல்லவி இருவரும் நடிக்கின்றனர். இந்த கதை நக்ஸலைட்டுகளை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா.

மூலக்கதை