அசத்தும் 'ஹொம்பாலே பிலிம்ஸ்'

தினமலர்  தினமலர்
அசத்தும் ஹொம்பாலே பிலிம்ஸ்

பாகுபலி படத்திற்கு பின், இந்திய அளவில், தொடர்ந்து, மூன்று படங்களை தயாரிக்கும் பெருமையை கே.ஜி.எப்., தயாரிப்பு நிறுவனம் பெற உள்ளது.கே.ஜி.எப்., முதல் பாகத்தை எடுத்த, விஜய் கிர்கன்துாரின், 'ஹொம்பாலே பிலிம்ஸ்' நிறுவனம், தற்போது, இரண்டாம் பாகத்தை எடுக்கிறது. மேலும், புனித் ராஜ்குமார் நடித்து வரும் யுவரத்னா என்ற படத்தையும் தயாரிக்கிறது.இந்நிலையில், முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படத்தை, இந்நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகிறது. இப்படம், ஐந்து மொழிகளில் உருவாகிறது. 'கொரோனா' தாக்கத்திற்கு பின், திரையுலகே ஆட்டம் கண்டுள்ள நிலையில், சவாலை ஏற்று, இந்திய திரையுலகில், ஒரு தயாரிப்பு நிறுவனம், மூன்று பிரமாண்ட படங்களை தயாரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை