ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93.92 லட்சத்தை தாண்டியது.!!!

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93.92 லட்சத்தை தாண்டியது.!!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.36 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 93.92 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 41,810 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,92,920 ஆக உயர்ந்தது.* புதிதாக 496 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,36,696 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,298 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால், குணமடைதோர் எண்ணிக்கை 88,02,267 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,53,956 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 93.71% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.83% ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 12,83,449 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 13,95,03,803 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை