கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 42,298 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை அறிக்கை

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 42,298 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,92,920-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,36,696-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 88,02,267-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,298 பேர் குணமடைந்துள்ளதாகவும், 496 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை