இணைய வழி பன்னாட்டுப் பட்டிமன்றம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இணைய வழி பன்னாட்டுப் பட்டிமன்றம்

    ‘வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும், தலைமுறை பெருமையையும் வளர்க்கிறார்களா’ என்ற தலைப்பில் பன்னாட்டுப் பட்டிமன்றம் வருகின்ற நவம்பர் 28ம் தேதி ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ளது. சிங்கப்பூரிலிருந்து முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் நடுவராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை வலைத்தமிழ் டிவி வழங்குகிறது.

    ‘வளர்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங்கில் உள்ள முனைவர் சித்ரா, சுவிட்சர்லாந்தில் உள்ள திருமதி மதிவதனி(வானமதி), கத்தாரில் உள்ள மகாதேவன் ஆகியோர் வாதிட உள்ளனர்.

    ‘வளர்க்கவில்லை’ என்ற தலைப்பில் சவுதியில் உள்ள முனைவர் பாக்யலக்ஷ்மி வேணு, அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள திருமதி ஜெயா மாறன், நியூஜெர்சியில் உள்ள பிரபு சின்னதம்பி ஆகியோர் வாதிட உள்ளனர்.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், சிங்கப்பூர் நேரப்படி இரவு 8 மணிக்கும், ஹாங்காங் நேரப்படி இரவு 8 மணிக்கும், கத்தார் நேரப்படி பகல் 3 மணிக்கும், அமெரிக்காவின் கிழக்கு பிராந்திய நேரப்படி காலை 8 மணிக்கும், சவுதி நேரப்படி பகல் 3 மணிக்கும். சுவிட்சர்லாந்து நேரப்படி பகல் 1 மணிக்கும் இணையவழியில் இப்பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியை www.valaitamil.tv or www.youtube.com/valaitamil or www.fb.com/valaitamil ஆகிய யூப்யூப் தளம் மற்றும் முகநூல் தளம் வாயிலாக நேரலையில் கண்டு களிக்கலாம்.

 

 

 

மூலக்கதை