தமிழ்நாடு அரசு – அரசுத் தேர்வுகள் இயக்ககம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழ்நாடு அரசுஅரசுத் தேர்வுகள் இயக்ககம்
     தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படித்த 9.50 லட்சம் மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை(இன்று) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது
     கரோனாத் தொற்று காரணமாக மாணவர்களின் நலன கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை(இன்று) காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும் இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.   
     இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். மதிப்பெண் சார்ந்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் அது தொடர்பாக ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை