கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் ரூ.33 கோடியில் நலத்திட்ட உதவிகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் ரூ.33 கோடியில் நலத்திட்ட உதவிகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
     கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு, மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 20 கோடியே 86 லட்சம் மதிப்பில் 60 பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டினார்.
மேலும் மாவட்டத்தில் ரூ. 15 கோடியே 15 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கட்டிட பணிகளைத் திறந்து வைத்தார். மேலும் 15,016 பயனாளிகளுக்கு ரூ. 33 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்அதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் மகளிர் சுய உதவிக் குழு விவசாய பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று கருத்துக்களைக் கேட்டறிந்தார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாசட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மூலக்கதை