சடலத்தின் கண்களை தின்ற எலிகள்: ரயில்வே போலீசார் மீது வழக்கு

தினகரன்  தினகரன்
சடலத்தின் கண்களை தின்ற எலிகள்: ரயில்வே போலீசார் மீது வழக்கு

போபால்: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங் (33). இவர் கர்நாடகா விரைவு ரயிலில் பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு பயணித்துள்ளார். கடந்த வியாழனன்று ஜிதேந்திர சிங் திடீரென சுயநினைவை இழந்து மயங்கி நிலையில் இருக்கையில் கிடந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜிதேந்திர சிங் உயிரிழந்துவிட்டதாக கூறியதால், உடலை மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் அருகிலுள்ள இட்டார்சி ரயில் நிலையத்தில் போலீசார் இறக்கியுள்ளனர். சுமார் இரவு 11:30 மணியளவில் சடலத்தை இறக்கிய போலீசார், அங்கிருந்த குடிசை ஒன்றில் அதை வைத்துவிட்டு சென்றுள்ளனர். தகவலறிந்து மறுநாள் பிற்பகல் ஜிதேந்திர சிங்கின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, சடலம் பாதிப்புக்குள்ளாகி கேட்பாறற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சடலத்தின் கண்களை எலிகள் தின்றிருந்தன. ஆனால், போலீசார் தரப்பில் ரயில்வே ஸ்டேசன் வளாகத்தில் அமரர் அறை இல்லாத காரணத்தினால், இரவில் இறக்கப்படும் சடலங்களை அக்குடிசையில் வைப்பது வழக்கம் என்று தெரிவித்தனர். இருந்தும், ஜிதேந்திர சிங்கின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை