தேர்தல் தோல்விகள் குறித்து தொடர்ந்து விமர்சனம்; கபில்சிபல் எங்கள் தலைவரே அல்ல! காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் காட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் தோல்விகள் குறித்து தொடர்ந்து விமர்சனம்; கபில்சிபல் எங்கள் தலைவரே அல்ல! காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் காட்டம்

புதுடெல்லி: தேர்தல் தோல்விகளால், இன்று எங்க கட்சி தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல், சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களில் காங்கிரசின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக அந்த கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறினார்.

இதற்கு அந்த கட்சியை சேர்ந்த அசோக் கெலாட், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்பட சில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கபில் சிபலோ தன்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளார்.

அண்மையில் கபில்சிபல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 18 மாதங்களாக கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லாதபோது, உங்களால் எப்படி திறமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியும்?. ஏன் நாம் தோற்றோம் என்று கட்சியில் பேசுவது கூட இல்லை.

நான் காந்தி குடும்பத்துக்கு எதிரானவன் அல்ல. கட்சியின் செயல் மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்து பேசும் வரை நான் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.

இன்று, காங்கிரஸ் தொண்டர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.

அவர்கள் மற்றவர்களிடம் எதிர்க்கொள்ளும் கேள்வி என்னவென்றால், உங்க கட்சிக்கு என்னாச்சு? என்பதுதான்.

தொண்டர்களின் உணர்வுகளுக்கு என்ன பதில் உள்ளது? எனது உணர்வுகளும் புண்பட்டுள்ளன. நான் யாருக்கும் சவால் விடவில்லை.

நாளையே மாற்றங்கள் நிகழந்து விடாது என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் 2014, 2019ல் தோற்றோம்.

நாம் மக்களிடம் செல்ல வேண்டும், காங்கிரஸ் சித்தாந்தம் என்ன என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கபில்சிபல் கட்சித் தலைமைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘காங்கிரசுக்கு கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

அது முடிந்ததும் முறையாக அறிவிக்கப்படும். கபில் சிபல் குறித்தும், அவர் பேசியது குறித்தும் நாங்கள் கருத்து தெரிவிக்க தேவையில்லை.

அவர் எங்கள் தலைவர் அல்ல’ என்றார்.

கட்சியின் மூத்த தலைவர்களுக்குள் கருத்து ேமாதல்கள் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

.

மூலக்கதை