ஜம்மு - காஷ்மீரில் பயங்கர மோதல்; பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜம்மு  காஷ்மீரில் பயங்கர மோதல்; பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

நகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் செயல் முறியடிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் திட்டங்களை நடத்த முயற்சித்து வருகின்றனர். அவற்றை பாதுகாப்பு படையினர், அதிரடியாக செயல்பட்டு முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தப்பட்டனர்.

ஜம்மு நகரை இணைக்கு ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நஹ்ரோடா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனைச்சாவடி பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நெடுஞ்சாலை முடக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினர் இருப்பதை பயங்கரவாதிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள், பஸ்சில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் பதுங்கி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்  நேற்று மாலை நடந்த தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்தனர்.

பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசினர். இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தேடுதல் நடந்து வருகிறது.

தாக்குதல் நடந்த உடனேயே, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய முழு பகுதியும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

.

மூலக்கதை