சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும்?: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும்?: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 5-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் 16 வார்டு உறுப்பினர்கள் தேர்வாயினர், மாவட்ட ஊராட்சி  தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய போதுமான உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலை நடத்தக் கோரி 8 உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை