ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்

சென்னை : 2018 - 19ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு படிவங்கள் உள்ளன.ஆண்டு முழுதுக்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்ய 'படிவம் - 9' உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு கீழ் வரவு செலவு உள்ள அனைத்து வணிகர்களும் 'படிவம்- 9'தாக்கல் செய்யவேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு செலவு உள்ள நிறுவனங்கள் 'படிவம் - 9ஏ 9 சி' தாக்கல் செய்யவேண்டும்.

2018 - 19ம் நிதியாண்டுக்கான படிவம் - 9 தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்.,௩௧ம் தேதிமுடிவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இதற்கான அவகாசத்தை டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை