பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: கபில்தேவ் டுவிட்

தினகரன்  தினகரன்
பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: கபில்தேவ் டுவிட்

மும்பை: தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. கபில் தேவ் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகிய நிலையில் டுவிட்டரில் நன்றி என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை