வலுக்கிறது புயல் சின்னம்: துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்றம்

தினகரன்  தினகரன்
வலுக்கிறது புயல் சின்னம்: துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுத்ததால் துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்பட்டுள்ளன. சென்னை, கடலூர், நாகை ஆகிய துறைமுகங்களில் 1,2 ஆகிய புயல் கூண்டுகள் ஏற்பட்டுள்ளன. எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எண் 1 புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை