தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது..!

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00,193-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,825-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,55,170- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 34,198- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை