கடலுாரில் 92 பேர் 'டிஸ்சார்ஜ்' 61 பேருக்கு கொரோனா தொற்று

தினமலர்  தினமலர்
கடலுாரில் 92 பேர் டிஸ்சார்ஜ் 61 பேருக்கு கொரோனா தொற்று

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 22 ஆயிரத்து 658 பேர். நேற்று 61 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 719ஆக உயர்ந்துள்ளது. மேலும் 92 பேர் குணமடைந்ததால், இது வரை 21 ஆயிரத்து 516 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்து 182 பேருக்கு பரிசோதனை செய்ததில், 2 லட்சத்து 47 ஆயிரத்து 607 பேருக்கு தொற்று இல்லை. 1,713 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் 35 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மூலக்கதை