கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக இடைவெளி பின்பற்றாத காரணத்தினால், சென்னை தி.நகரில் உள்ள குமரன் துணிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை