சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னை பல்லாவரம் அருகே மாநகரப் பேருந்து மோதி சாலையில் நடந்து சென்ற தவபாலன்(56) என்பவர் உயிரிழந்தார். தியாகராயர் நகர் சவுத் போக் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவாஜி (45) என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.