ராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
ராதாபுரம் தொகுதி முடிவு: அறிவிக்க தடை நீட்டிப்பு

புதுடில்லி,:ராதாபுரம் சட்டசபை தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதற்கான தடையை நவ.22 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் 2016ல் நடந்த தேர்தலில் முறைக்கேடு நடந்ததாக தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குறிப்பிட்ட சுற்றுகளின் ஓட்டுகள் மற்றும் தபால் ஓட்டுகள் மட்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் எண்ணப்பட்டது.இதற்கிடையே அந்த தொகுதியில் வென்ற அ.தி.மு.க. வின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் மறு ஓட்டு எண்ணிக்கையின் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு நேற்று (நவ.13) விசாரணைக்கு வந்த நிலையில் முடிவை அறிவிப்பதற்கான தடையை நவ. 22 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மூலக்கதை