மணிமுத்தாறு அணையில் நீர்திறக்க முதல்வர் உத்தரவு

தினகரன்  தினகரன்
மணிமுத்தாறு அணையில் நீர்திறக்க முதல்வர் உத்தரவு

நெல்லை: நெல்லை மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை முதல் 140 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கார் பருவ சாகுபடிக்கு நாளை முதல் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 384.05 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 2,756.62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை