பாம்பன் பாலத்தை கடந்த சரக்கு கப்பல்கள்

தினமலர்  தினமலர்
பாம்பன் பாலத்தை கடந்த சரக்கு கப்பல்கள்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து இரு சரக்கு கப்பல்கள் குஜராத் சென்றன.

ஒடிசா பராதீப் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரு சரக்கு கப்பல்கள் நேற்று முன்தினம் பாம்பன் கடற்கரை வந்தது. இங்கிருந்து குஜராத் ஜப்ராபாத் துறைமுகம் செல்ல பாம்பன் துறைமுக அலுவலரிடம் கப்பல் கேப்டன் மனு கொடுத்தார். அதன்படி நேற்று மதியம் ரயில் துாக்கு பாலம் திறந்ததும், இரு சரக்கு கப்பல்களும் பாலத்தை கடந்து குஜராத் சென்றன.

தொடர்ந்து மூக்கையூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கடலில் ஆழப்படுத்தும் இயந்திரம் பாம்பன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் சென்றது. மேலும் நாகையில் இருந்து ஆழ்கடல் மீன் பிடி படகுகள் கன்னியாகுமரி சென்றன.

மூலக்கதை