பாலியல் புகார்; திமிரு நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தினமலர்  தினமலர்
பாலியல் புகார்; திமிரு நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கேரள திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் விநாயகன் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக கல்பட்டா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நடிகர் விஷால், ஸ்ரேயா ரெட்டி, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் திமிரு. இந்தப் படம் இல்லாமல் எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வில்லனாக, குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார் விநாயகன்.

இந்நிலையில், அவர் மீது கேரளாவின் சமூக ஆர்வலரும், மாடலுமான மிருதுளா தேவி, பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக கேரளாவின் கல்பட்டா போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது:

ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக, நடிகர் விநாயகனை சந்திக்கச் சென்றேன். அப்போது, என்னுடைய அம்மாவும் இருந்தார். அப்போது, என்னிடம் மிக ஆபாசமாகவும்; அருவெறுக்கத்தக்க வகையிலும் பேசினார். பின், இருவரையும் மிரட்டினார். தன்னுடைய ஆசைக்கேற்ப நடக்க வேண்டும் என்றும் கூறினார். அவர் பாலியல் ரீதியில் எங்களை துன்பப்படுத்த முயன்றார். அதனால், இதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியிருந்தார்.

இதையடுத்து, நடிகர் விநாயகனை போலீசார் தேடத் துவங்கினார். இதை அறிந்து கொண்ட நடிகர் விநாயகன், கல்பட்டா போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசில் சரண்டர் ஆனார். அதைத் தொடர்ந்து, கல்பட்டா போலீசார் அவரை விசாரித்தனர். அப்போது, நடந்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அவர், போலீசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்பட்டா நீதிமன்றத்தில், விநாயகன் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஒப்புதல் வாக்குமூலத்தில், நடிகர் விநாயகன் தான், மிருதுளா தேவிக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

மூலக்கதை