ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மும்பையை வீழ்த்தியது கோவா

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: மும்பையை வீழ்த்தியது கோவா

மும்பை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் நேற்றிரவு  மும்பையில் நடந்த 17வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, எப்சி கோவாவை  எதிர்கொண்டது. கோவா அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. பிற்பாதியில் மும்பை வீரர்கள் சர்தாக் (49வது நிமிடம்), சக்ரவர்த்தி (55வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர். இதன் பின்னர் கோவா வீரர்கள் ஹூகோ பவுமாஸ் (59வது நிமிடம்), கார்லஸ் பெனா (89வது நிமிடம்) கோல் அடித்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்தது. 4வது லீக்கில் ஆடிய கோவா அணி 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. ஐஎஸ்எல் வரலாற்றில் மும்பை சிட்டி அணிக்கு எதிராக மட்டும் கோவா அணி இதுவரை 26 கோல்கள் திணித்துள்ளது. இதனால், ஐஎஸ்எல் போட்டியில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக கோல்கள் அடித்த அணி சாதனையை கோவா படைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- ஒடிசா எப்சி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை