பொன்னியின் செல்வன்: டிசம்பரில் தாய்லாந்து பறக்கும் மணிரத்னம்

தினமலர்  தினமலர்
பொன்னியின் செல்வன்: டிசம்பரில் தாய்லாந்து பறக்கும் மணிரத்னம்

கல்கியின் பொன்னியின் செல்வன் பட பணிகளில் பரபரப்பாக உள்ளார் இயக்குனர் மணிரத்னம். கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் தொடங்கப்பட்டு, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பசுமையான காடுகளில் நடைபெறுகிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் தனது குழுவுடன் தாய்லாந்து செல்கிறார் மணிரத்னம்.

மூலக்கதை