திருவனந்தபுரத்தில் பரபரப்பு: 2 திருமணம் செய்த பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்...போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவனந்தபுரத்தில் பரபரப்பு: 2 திருமணம் செய்த பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்...போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்

திருவனந்தபுரம்: 2வது திருமணம் செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை கோட்டாக்குழி பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (31).

இவரது முதல் கணவர் இறந்துவிட்டார்.   இதனால் 2வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் கணவர் மூலம் தற்போது 13 வயதில் ஒரு மகனும், 2வது கணவர் மூலம்  9 வயதில் மகளும் உள்ளனர்.   இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருடன் அஞ்சுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.



இதனால் கணவன் வீட்டில் இல்லாத  போது அஞ்சு கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஞ்சு  திடீரென மாயமானார்.

குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.   இதுகுறித்து அவரது கணவர் காட்டாக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அஞ்சு,  கள்ளக்காதலன் ராஜேசுடன் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை  தொடர்ந்து நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி 2 பேரையும் 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து  நெய்யாற்றின்கரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

.

மூலக்கதை