ஆஸ்திரேலியாவுடன் மோதிய டி20 போட்டியில் கொந்தளித்த பாக். கேப்டன்: ஆசிப் அலியின் செய்கையால் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவுடன் மோதிய டி20 போட்டியில் கொந்தளித்த பாக். கேப்டன்: ஆசிப் அலியின் செய்கையால் அதிர்ச்சி

கான்பெரா: பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி கான்பெரா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள்  ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தனர்.

இக்கட்டான நிலையில்  அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், நிதானமாக விளையாடி 38 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 150 ரன்களை எடுத்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின்  துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், ஸ்டீவன் ஸ்மித் 80 (51) அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகளை  மட்டுமே பறிகொடுத்து 18. 3 பந்துகளில் வெற்றியை எட்டியது.

போட்டியின் போது ஆரம்பத்திலே 3 விக்கெட்டுகள் சரிந்திருந்ததால், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு பிரஷர் அதிகமானது.

அசாம் 42 ரன்கள்  எடுத்திருந்த போது, எதிர்முனையில் இருந்த ஆசிப் அலி இரண்டாவது ரன்னுக்கு திரும்ப மறுத்துவிட்டார்.

இதனால் அசாம் கோபத்தில் இருக்க, அடுத்த  பந்திலே ஆசிப் அலி கேட்ச் கொடுத்து வெளியேறியதால், என்ன செய்வதென்றே தெரியாமல், கை சைகையால் தனது அதிருப்தியை அசாம்  வெளிப்படுத்தினார்.

.

மூலக்கதை