ஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதி சகோதரி கைது: துருக்கி அதிகாரிகள் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதி சகோதரி கைது: துருக்கி அதிகாரிகள் அதிரடி

மாஸ்கோ: ஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த சில  வாரங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் பதுங்கி இருந்த  பாக்தாதி, அமெரிக்க சிறப்பு படை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை  வெடிக்க வைத்து பாக்தாதி பலியானதாக தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், பாக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (65), அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்த  ராஸ்மியாவை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை