தொடரை வென்ற ஜோகோவிச்சுக்கு ரூ.7.75 கோடி பரிசு...தரவரிசையிலும் முன்னோடி
பாரீஸ்: பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ. 7. 75 கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.
ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ. டி. பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34வது முறையாகும். இந்த வகையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முன்னணியில் (35 பட்டம்) இருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பதை ஜோகோவிச் நெருங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.