பிசிசிஐ தலைவரின் அடுத்த இலக்கு மேற்குவங்க அடுத்த முதல்வர் யார்?: அதிரடியை பற்றவைத்த சேவாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிசிசிஐ தலைவரின் அடுத்த இலக்கு மேற்குவங்க அடுத்த முதல்வர் யார்?: அதிரடியை பற்றவைத்த சேவாக்

மும்பை: பிசிசிஐயின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதில் இருந்து அவரை பற்றி பலரும் பழைய நினைவுகளை பகிர்ந்தபடியே உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், கங்குலி பிசிசிஐ தலைவராக பதவியேற்றது தொடர்பாக இப்போது ஒரு பழைய நினைவை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, செய்தி இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ‘இனிமேல் பிசிசிஐயின் நடவடிக்கை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்.

ஏனென்றால் தற்போது கங்குலி அதன் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அவர் 2000ம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக இருந்த போது, அவர் அப்படிதான் செயல்பட்டார்.

அத்துடன் எங்களுக்கு வெளிநாட்டு தொடர்களில் எவ்வாறு வெற்றிப் பெறுவது என்பது தொடர்பாக கற்றுக் கொடுத்தார்.

அதேபோல தற்போதும் அவர் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். அவர் பிசிசிஐயின் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு எனக்கு அவர் 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாடியது ஞாபகத்திற்கு வந்தது.

அந்த ஆட்டத்தின் போது நான், கங்குலி குறித்து இரண்டு விஷயங்களை கணித்து கூறினேன். அந்தக் கணிப்பில் இப்போது ஒன்று நிஜமாகிவிட்டது.

இன்னொன்று விரைவில் நிஜமாகும். நான் முதலில் கணித்தது கங்குலி பிசிசிஐயின் தலைவராக வருவார் என்பது.

இரண்டாவது அவர் மேற்குவங்கத்தின் முதல்வராக வருவார் என்பது.

அந்தக் கணிப்பு விரைவில் நிறைவேறும்’ என்று பரபரப்பாக கட்டுரையில் சேவாக் கூறியுள்ளார்.

.

மூலக்கதை