சொந்த ஊரில் நடந்த டெஸ்ட் போட்டி ராணுவ ஜீப்பில் வந்த தோனி: ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சொந்த ஊரில் நடந்த டெஸ்ட் போட்டி ராணுவ ஜீப்பில் வந்த தோனி: ரசிகர்கள் கொண்டாட்டம்

ராஞ்சி: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடந்தது. இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்ததால், முன்னாள் கேப்டன் தோனி (சொந்த ஊர் ராஞ்சி) நேரில் போட்டியை காண அவருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் முதல் மூன்று நாட்கள் நடந்த போட்டியை காண தோனி வரவில்லை.

நேற்றைய நான்காவது நாள் ஆட்டம் வெறும் 12 பந்துகள் மட்டுமே நீடித்தது. போட்டிக்கு முன்பாக ராணுவ ஜீப்பில் வந்த தோனி, விளையாட்டு அரங்குக்கு வந்தார்.

அவர், சபாஷ் நதீமை பேசிய போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலானது. போட்டி முடிந்தவுடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வீரர்களை சந்தித்து வாழ்த்து கூறினார்.



கடந்த முறை போலவே இம்முறையும் தோனி ராஞ்சி மைதானத்துக்கு கடைசி நேரத்தில் நேரில் வந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். ‘தல’ இல்லாத ராஞ்சியா? கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தோனியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இப்போட்டியின் மூலம், இந்திய அணி டெஸ்ட் அரங்கில் தனது 6வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அதாவது, இன்னிங்ஸ் - 272 ரன்கள் (எதிர்- வெஸ்ட் இண்டீஸ், 2018), இன்னிங்ஸ் - 262 ரன்கள் (எதிர்- ஆப்கானிஸ்தான், 2018), இன்னிங்ஸ் - 239 ரன்கள் (எதிர்- வங்கதேசம், 2007), இன்னிங்ஸ் - 239 ரன்கள் (எதிர்- இலங்கை, 2017), இன்னிங்ஸ் - 219 ரன்கள் (எதிர்- ஆஸ்திரேலியா, 1998), இன்னிங்ஸ் - 202 ரன்கள் (எதிர்- தென் ஆப்ரிக்கா, 2019) என்று சாதனை படைத்துள்ளது.

.

மூலக்கதை