நவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

தினமலர்  தினமலர்
நவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

லாகூர் : சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் ஹூசைன் நவாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.


2017 ம் ஆண்டு பாக்., சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில் ஒன்றாக அல் அசீசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பிற்கு 2018 ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 3 முறை பிரதமராக இருந்த 69 வயதாகும் நவாஸ் ஷெரிப்பிற்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அக்.,21 ம் தேதி லாகூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பாக லண்டனில் இருந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நவாஸ் ஷெரீப் மகன் ஹூசைன் ஷெரீப், எனது தந்தையின் ரத்த அணுக்களில் விஷம் கலந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசடைந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 ஆக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை எனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன் என இம்ரான் கான் அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப்பின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2000 லிருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளது எனவும், இருந்தும் அவரது உடல்நிலை மோசமான நிலையிலேயே இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்திருப்பதாகவும், உடல்நிலை தேறும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருப்பார் எனவும் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சி தெரிவித்துள்ளது.

மூலக்கதை