வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 25,000 பேர் மட்டுமே ஒட்டு போட்டனர்

தினகரன்  தினகரன்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 25,000 பேர் மட்டுமே ஒட்டு போட்டனர்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஒரு லட்சம் பேரில், 25 ஆயிரம் பேர் மட்டுமே கடந்த மக்களவை தேர்தலில் இந்தியா வந்து ஓட்டு போட்டதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 99,807 பேர் இன்னும் இந்திய குடிமகன்களாக உள்ளனர். இவர்களில் 91,850 பேர் ஆண்கள், 7,943 பேர் பெண்கள், 14 பேர் திருநங்கைகள். இவர்களில் ஆண்கள் 25,606 பேரும், பெண்கள் 1,148 பேர் மட்டுமே கடந்த மக்களவை தேர்தலின் போது இந்தியா வந்து வாக்களித்துள்ளனர்.

மூலக்கதை