பிலிப்பைன்சில் மஹாத்மா காந்தி சிலை திறப்பு

தினமலர்  தினமலர்
பிலிப்பைன்சில் மஹாத்மா காந்தி சிலை திறப்பு

மணிலா: பிலிப்பைன்சில், மஹாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல்கட்டமாக பிலிப்பைன்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பிற்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை , இன்று(அக்.,20) காலை நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மூலக்கதை