காதல் மனைவியை பிரிந்து விட்டேன்: மனோஜ் மஞ்சு

தினமலர்  தினமலர்
காதல் மனைவியை பிரிந்து விட்டேன்: மனோஜ் மஞ்சு

தெலுங்கு பட உலகின் பிரபல நடிகரான மனோஜ் மஞ்சு, தன்னுடைய காதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.


தெலுங்கு பட உலகின் மிகப் பிரபலமான நடிகர் மகேஷ் பாபு. அவருக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என இரு மகன் களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். மூவருமே சினிமாத் துறையில் தான் உள்ளனர். எல்லோருமே நடிப்புத் தொழிலைத்தான் மேற்கொண்டிருக்கின்றனர். நடிகர் மகேஷ் பாபுவின், இரண்டாவது மகன் மனோஜ் மஞ்சு, பிரணதி என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2015ல், அவர், பிரணதியை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரு ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், அவர்கள் இருவரும் விவகாரத்தே செய்து விட்டதாக, இப்போதுதான் மனோஜ் மஞ்சு கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:

எனக்கும் பிரணதிக்குமான உறவு, நன் கு யோசித்து, அழகாக மலர்ந்த உறவு. திருமணம் வரை சென்றது. ஆனால், அதன் பின், இரு உள்ளங்களுக்கு இடையே ஏற்பட்ட சில மனவலிகள், இருவரையும் நிரந்தர பிரிவு வரை சென்று விட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே இருவரும் முறைப்படி விவகாரத்துப் பெற்று விட்டோம். இருவரும், இப்போது தனித் தனியாகவே வாழ்ந்து வருகிறோம். மிகந்த வலியோடுதான், இதை தாமதமாக வெளியே சொல்கிறேன்.

இவ்வாறு மனோஜ் மஞ்சு கூறியிருக்கிறார்.

மூலக்கதை