சிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா?

தினமலர்  தினமலர்
சிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கயிருந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கயிருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அந்த படத்தை வேறு நடிகரை வைத்து எடுக்கப்போவதாக அறிவித்தனர். அதன்பிறகு மாநாடு படத்திற்கு பதிலடியாக மகாமாநாடு என்ற படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக அறிவித்தார் சிம்பு. ஆனால் சொன்னாரே ஒழிய அந்த படம் தொடங்கப்படவே இல்லை.

இந்தநிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டுள்ளார். அப்போது மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்புக்கு சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார் என்று உறுதி அளித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆக, கிடப்பில் போடப்பட்ட மாநாடு தூசு தட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலக்கதை