ஜோளிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

தினகரன்  தினகரன்
ஜோளிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய்தாமஸ். இவரது மனைவி ஜோளி. கடந்த 2002 முதல் 2016க்கு உள்பட்ட காலக்கட்டத்தில் ராய் தாமஸ், அவரது தந்தை டோம் தாமஸ், தாய் அன்னம்மா உள்பட 6 பேர் அடுத்தடுத்து மர்மமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலைகளை செய்தது ஜோளி என்று தெரிய வந்தது. இதையடுத்து ஜோளி, அவரது உறவினர் மேத்யூ, நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தாமரசேரி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த விசாரணை முடிந்த பின்னர் மேலும் 2 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 3 பேரையும் போலீசார் தாமரசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கிடையே ஜாமீன் கோரி மூன்று பேரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூலக்கதை