திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்
விக்கிரவாண்டி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் திண்ணை பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பதாலேயே நடத்தாமல் தவிக்கின்றனர் என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.