கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.44 கோடி பறிமுதல் : வருமான வரித்துறை தகவல்

தினகரன்  தினகரன்
கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.44 கோடி பறிமுதல் : வருமான வரித்துறை தகவல்

சென்னை : கல்கி ஆசிரமத்தில் ஐ.டி.நடத்திய ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ரூ.43.9 கோடி இந்தியப் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமம், கல்கி பாபாவின் மகனுக்கு சொந்தமான 40 இடங்களில் 3 நாட்களாக சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை