தியாகராய நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கேரள போலீசார் திடீர் சோதனை
சென்னை : சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கேரள போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாமலும், ஆக்கிரமித்தும் கொச்சினில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிவிற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக கேரள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபிபுல்லா சாலையில் உள்ள நிறுவனத்தில் காலை முதல் சோதனையிட்டு, ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்..