தமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னை : நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கேரள கடற்கரையொட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.