முடி வெட்டியதற்காக பிரபல நடிகருக்கு மிரட்டல்: தயாரிப்பாளர் மீது புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முடி வெட்டியதற்காக பிரபல நடிகருக்கு மிரட்டல்: தயாரிப்பாளர் மீது புகார்

திருவனந்தபுரம்: முடிவெட்டியதற்காக தயாரிப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக மலையாள இளம் நடிகர் ஷேன்நிகாம் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷேன்நிகம்.

‘அன்னையும் ரசூலும்’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது வெயில், குர்பானி ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கிடையே மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் ஷேன்நிகாம் ஒரு புகார் அளித்தார்.

இந்த புகாரை பேஸ்புக்கிலும் லைவ் வீடியோவாக வெளியிட்டார். அந்த புகாரில், நான் தற்போது வெயில், குர்பானி என்று 2 படங்களில் ஹீேராவாக நடித்து வருகிறேன்.

வெயில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

தற்போது குர்பானி படத்தில் நடித்து வருகிறேன்.

இதற்காக எனது கெட்டப்பை மாற்ற வேண்டும் என்று குர்பானி பட இயக்குநர் கூறினார். இதையடுத்து வெயில் பட குழுவினரின் அனுமதியை பெற்று தலைமுடியை வெட்ட தீர்மானிக்கப் பட்டது.

அப்போது பின்புறம் உள்ள முடியை கூடுதலாக வெட்டிவிட்டனர். இதை வேண்டுமென்றே நான் செய்யவில்லை.

மேலும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தேன். அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதிய கெட்டப் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டேன். அதை பார்த்த வெயில் பட தயாரிப்பாளர் ஜோதிஜார்ஜ், என்னை போனில் தொடர்பு கொண்டார்.

முடிவெட்டியதால்  படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி மிக மோசமாக திட்டினார். இது தவிர சமூக வலைதளங்களில் என்னை குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ளார்.

எனது எதிர்காலத்தை அழித்துவிடுவேன் என்றும், தொடர்ந்து வாழ விடமாட்டேன் என்றும் கூறினார். இதற்கு ஆதாரமாக தயாரிப்பாளர் ஜோதிஜார்ஜ் பேசிய போன் பேச்சு பதிவையும் நடிகர் சங்கத்தில் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை