சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான போக்குவரத்து தொடக்கம்
சென்னை: சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் சோதனை ஓட்டமாக காலை 8.55 மணிக்கு ஏா் இந்தியா அலையன்ஸ் ஏா் விமானம் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது. இலங்கை யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.