சிங்கப்பூரில் உயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கப்பூர் அரசு அறிவிப்ப

வலைத்தமிழ்  வலைத்தமிழ்


சிங்கப்பூர் கல்வியமைச்சர் திரு.ஓங் யீ காங் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு கல்விப்பயணம் சென்றிருந்தார். அப்போது அண்ணா பலகலைக்கழகத்தில் தமிழிணையக் கல்விக்கழகத்தினை சுற்றிப்பார்த்து கலந்துரையாடல் செய்தார்.

தமிழ்மொழியினை விருப்பப்பாடமாக தெரிவு செய்யும் மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தினை பயன்படுத்துவார்கள் என்று அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில் அவர்கள் தமிழ் இலக்கியம் சார்ந்த ஆழமான அறிவைப் பெற இது மிகவும் பயன்படும் என்று தெரிவித்தார்.

தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுவந்த விருப்பப்பாடமான தமிழ் , அடுத்த ஆண்டுமுதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாத தெரிவித்தார்.


தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டம் அடுத்த ஆண்டுமுதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை