உலக கோப்பை சர்ச்ைச ரூல்சுக்கு தீர்வு தெளிவு கிடைக்கும் வரை ‘சூப்பர் ஓவர்’ அடிக்கணும்...ஐசிசி அதிரடி அறிவிப்பு
துபாய்: கடந்த மே மற்றும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்தன.
எந்த அணி வெற்றி, தோல்வி என்பதை தீர்மானிக்க சிக்கல் ஏற்பட்டதால், ‘சூப்பர் ஓவர்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதையடுத்து, இறுதிப்போட்டியில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு அதில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்போது உள்ள ‘சூப்பர் ஓவர்’ முறையில் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, ‘சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு தீர்மானிக்கப்படாது. ஐசிசி 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும்.
அதேநேரத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும்.
அதன்பின், அதிக ரன்களை எடுக்கும் அணியே வெற்றிப் பெற்ற அணியாக அறிவிக்கப்படும்’ என்று ஐசிசி அறிவித்துள்ளது.
.