ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு விலை முதல் நாளிலேயே சாதனை

தினமலர்  தினமலர்
ஐ.ஆர்.சி.டி.சி., பங்கு விலை முதல் நாளிலேயே சாதனை

புதுடில்லி:ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் பங்குகள் விலை, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, சாதனை புரிந்துள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின், ஒரு பங்கின் வெளியீட்டு விலை, 320 ரூபாயாக இருந்த நிலையில், முதல் வர்த்தக நாளன்று, அதன் விலை, மும்பை பங்குச் சந்தையில், 129 சதவீதம் அதிகரித்து, 728.60 ரூபாயாக உயர்ந்தது.
இதுவே, தேசிய பங்குச் சந்தையில், 733 ரூபாயாக உயர்ந்தது.முதல் நாளில், 54.40 லட்சம் பங்குகள், மும்பை பங்குச் சந்தையிலும்; 4.52 கோடி பங்குகள், தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகமாகின. மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 11 ஆயிரத்து, 658 கோடி ரூபாயாக உள்ளது.இதற்கு முன், 2017ல், ‘அவென்யு சூப்பர்மார்ட்ஸ்’ நிறுவனம், அதன் பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளில், 102 சதவீதம் அதிகரித்து சாதனை புரிந்தது. இப்போது அதை முறியடித்துள்ளது, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம்.சமீப காலத்தில் இவ்வளவு அதிக லாபத்தை, முதல் நாளில், வேறு எந்த நிறுவனமும் அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை